வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Sunday, September 12, 2010

*13*: நன்றி


நட்சத்திர வாரத்தை என் தந்தையார் பற்றிய இடுகையுடன் ஆரம்பித்து தந்தை பெரியார் பற்றிய இடுகையுடன் நிறைவு செய்திருக்கிறேன்.

நட்சத்திர வாரத்தில் தொடர்ந்து எழுதும் போது ஒரே தளத்தில் எழுதினால் படிப்பவர்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்துவிடும் என்ற எண்ணத்தில் வெவ்வேறு subject-ல் எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன். இதனை ஓரளவு நிறைவேற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன். நான் சனிக்கிழமை எழுத நினைத்திருந்த பாலி (இந்தோனேசியா) பற்றிய கட்டுரையை நேரப் பற்றாக்குறையால் எழுத முடியவில்லை.

நான் நிறைய படித்த இலக்கியவாதி கிடையாது. எனது எண்ணங்களையும், அனுபவங்களையும் பதிவு செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன். எனவே, எனது எழுத்தில் குறைகள் இருக்கலாம்.

நட்சத்திர வார பதிவுகளைப் படித்த, கருத்துகள் தெரிவித்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நீன்ட வார இறுதி விடுமுறை மற்றும் பதிவுகளை தயார் செய்தல் போன்ற காரணத்தால் பின்னூட்டங்களுக்கு உடனே பதில் அளிக்க இயலவில்லை.

என் பதிவுகளை பொறுமையாகப் படித்து எழுத்துப் பிழைகளை திருத்தி கொடுத்த என் மனைவி கீதாவிற்கு நன்றி.

இந்த வார நட்சத்திரமாக என்னை தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கு மீண்டும் என் நன்றிகள்!

நன்றி ! வணக்கம்!

[படம் உதவி: http://kamna.webdunia.com/]

                 *                 *               *

12 comments:

a said...

vazthukkal Ravi.... all of your posts were very nice...

Anonymous said...

//பொருமையாகப் படித்து//
அண்ணே அருமையாக பொறுமையாக இடுகைகள் இட்டதற்கு நன்றி.

ஜோசப் பால்ராஜ் said...

மிக சிறந்த நட்சத்திர வாரம், பல பயனுள்ள பதிவுகள் முக்கியமா 4ஜி டெக்னாலஜி குறித்த பதிவு, தஞ்சையின் பெருமையை சொல்லும் ஊர் பதிவுகள் என கலக்கிட்டிங்க.

எல்லாருக்கும் மொதல் ஹீரோ அவங்கப்பா தான். ( எனக்கு இன்னமும் எங்கப்பா மட்டும்தான் ஹீரோ) அப்பாவுல ஆரம்பிச்சு, நம்மள மாதிரி சாமான்யனும் மேல காரணமா இருந்த தந்தை பெரியார்ல முடிச்சுருக்கிங்க.

நட்சத்திரம் - மிளிர்கிறது.

ஜோ/Joe said...

உங்கள் வேலைப்பளுக்கிடையிலும் இவ்வளவு சிரத்தை எடுத்து அருமையான பதிவுகள் எழுதியது எடுத்துக்கொண்ட விடயத்தில் உங்கள் உறுதியையும் முனைப்பையும் காட்டியது ..வாழ்த்துகள்!

குடுகுடுப்பை said...

அருமையா வந்திருக்கு ரவி ஆலம்பிரியர்.பெரியார் பற்றிய புரிதல் எனக்கு ஏற்பட்டது போன்றது.

velji said...

நன்றி!

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் நண்பரே . நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போலவே .இந்த வார பதிவுகள் அனைத்தும் புதுமைகள் தான்

அது ஒரு கனாக் காலம் said...

நன்றாகவே இருந்தது

ஆ.ஞானசேகரன் said...

மிக்க மகிச்சியும் பாராட்டுகளும் நண்பரே!... இனிதே முடித்த பணிக்கும் வாழ்த்துகள்

-/சுடலை மாடன்/- said...

அன்புள்ள இரவி,

சகோதரர் ஜோ சொல்லியது போல், நட்சத்திர வாரத்தில் இவ்வளவு சிரத்தை எடுத்து வெவ்வேறான தலைப்புகளில் பதிவுகள் எழுதியது நீங்கள் எடுத்துக்கொண்ட விடயத்தில் உங்கள் முனைப்பையும், ஈடுபாட்டையும் காட்டுகிறது. மிக்க நன்றி.

அனைத்து இடுகைகளையும் படித்தேன். உங்கள் எண்ண ஒட்டத்தை பாசாங்கில்லாமல், நன்கு அறிமுகப்படுத்துபவையாக இருந்தன. ஒவ்வொரு திரியிலும் இனி நீங்கள் விரிவாக எழுதுங்கள்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

ஜோதிஜி said...

நன்றாகவே இருந்தது

ரவி

எனக்கு வாய்த்த குரு மிக திறமைசாலி. அவரே உங்கள் தொடர் நட்சத்திர வாரத்தை பாராட்டி விட்டார்.

தமிழ எழுத்துப் பிழைகள் பெரிய விசயமல்ல.

தமிழை வைத்து பிழைத்துக் கொண்டுருப்பவர்களை ஒப்பிடும் போது?

Ravichandran Somu said...

வழிப்போக்கன் யோகேஷ்-- நன்றி

Anonymous-- நன்றி நண்பரே. திருத்தி விட்டேன்

ஜோசப் பால்ராஜ்-- நன்றி தம்பி.

//எல்லாருக்கும் மொதல் ஹீரோ அவங்கப்பா தான்//

உண்மை... அதனால்தான் ”மறக்க முடிதாத மனிதர்கள்” தொடரை அப்பா பற்றிய இடுகையுடன் ஆரம்பித்தேன்

ஜோ/Joe-- தொடர்ந்து தாங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி ஜோ.

குடுகுடுப்பை-- மிக்க நன்றி குடுகுடுப்பை சோழரே!

velji-- நன்றி

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் -- நன்றி

அது ஒரு கனாக் காலம்-- நன்றி

ஆ.ஞானசேகரன்-- நன்றி

-/சுடலை மாடன்/-- மிக்க நன்றி. நேரம் கிடைக்கும்போது நிச்சயமாக தொடர்ந்து எழுதுகிறேன். குறிப்பாக தொலை தொடர்பு தொழில்நுட்பம் பற்றி...

ஜோதிஜி-- தொடர்ந்து தாங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி தலைவரே!